January 21st, 2012
-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-
வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பிற்குள்ளான முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையில் “தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில்,அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்” எனும் தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்த செய்தி பலர் அறிந்ததே. அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டவர்கள், இப்படியொரு அறிக்கை வெளியிடவேண்டும் என சிந்தித்து அவ்வறிக்கையை தயாரிக்க காரணமாக இருந்தவர்கள் என அனைவர் மீதும் எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, விமர்சனங்கள் என்பதற்கும் அப்பால், எதிர்காலங்களில் இனங்களுக்கிடையிலேயான ஒருமைப்பாட்டினதும், இனங்களுக்கிடையிலேயான புரிந்துணர்வின் முக்கியத்துவமும், கருதி அவ்வறிக்கையை நாம் ஆதரிக்கின்றோம். தொடர்ச்சி
January 19th, 2012
விளிம்பு: விழிப்பும் விசாரணைகளும்
ரொறொன்டோ கனடா மே 5-6 2012
1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை, காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6. சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
இத்தலைப்புக்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர், கட்டுரைக்கான முன்மொழிவுகளை 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் எழுதி, உங்களைப் பற்றிய விபரங்களுடன் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக llakiyasanthipu39@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு – ஒழங்கமைப்பாளர்
சுமதி 647 351 2213
http://ilakiyasanthipu39.blogspot.com/
January 9th, 2012
பௌத்த சிங்கள் பேரினவாதம் எவ்வாறு சிறுபான்மையாக இருக்கக் கூடிய சமூகங்களின் உரிமையை மறுக்கிறது அது அரசாக இருப்பதால் வலிமையுடன் மறுக்கிறது. சாம,பேத தான, தண்டம் எல்லாவற்றையும் பாவித்து மறுக்கிறது
ஆனால் அரசாக இல்லாத யாழ்மையவாதம் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளோ அல்லது மலையக மக்களின் பிரச்சனைகளோ யாழ்ப்பாணத்தில் சமூகரீதியாக ஒடுக்கபட்டவர்களின் பிரச்சனைகளோ யாழுக்கு அப்பாலான வடக்கு கிழக்கின் பிரச்சனைகளோ இரண்டாம் பட்சமானவையாகத்தான் அணுகுகின்றன என்பது துரதிஸ்டமான உண்மையாகும் . தொடர்ச்சி
January 6th, 2012
(நன்றி வல்லினம்)
நரேன்
ஆதவன் தீட்சண்யா என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள். அது உங்கள் இயற்பெயரா?
நான் பிறந்த நேரத்தை வைத்து கணித்து (?) எழுதப்பட்ட ஜாதகம் ஒன்றை எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். தொடர்ச்சி
January 2nd, 2012
- தி.ஸ்ரீதரன் (சுகு)
பிறிதொரு தேசத்தை ஒடுக்கும் தேசம் தான் சுதந்திரமாக இருக்கமுடியாதுஎன மார்க்சும் ஏங்கல்சும் சுயநிர்ணய உரிமைக்கோட்பட்டிற்கு அடி எடுத்துக் கொடுத்தனர்.
1900ம் ஆம் ஆண்டின் முற்பகுதியில் முதல் இரண்டு தசாப்தங்களிலும் சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்கள் தோழர் லெனின், தோழர் ரொட்ஸ்கி , தோழர் ரோசா லக்ஸ்ஸம்பேர்க், தோழர் ஸ்டாலின் ஆகியோரால் அறிவார்ந்த முறையால் விவாதிக்கப்பட்டது. தொடர்ச்சி
December 18th, 2011
அண்மையில் சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையானது கொண்டுள்ள விடயதானங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்களிடையே பெரும் குழப்பநிலையையும் தோற்றுவிக்கத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சி
November 13th, 2011
இலங்கையின் சமகால அரசியல்,சமூக நிலவரங்களுடன் , தமிழ் ,முஸ்லிம் மலையக , தலித் மக்கள் தொடர்பாக எதிர்வரும் 27-11-2011ம் திகதியில் (ஞாயிறு) பெர்லின் நகரில் முழுநாள் சந்திப்பு உரையாடல் அரங்கு ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த அரங்கு பேசுபொருளாக கொண்டுள்ள விடயங்களில் திறந்த உரையாடலும் நடைபெறும்.கலந்து பங்காற்ற விரும்பும் அனைவரும் காலம் தாழ்த்தாது தொடர்பு கொள்ளவும்.லண்டன்,பிரான்ஸ்,நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்தும் பங்குபற்றுனர்கள் கலந்து கொள்கின்றனர்.
அமர்வு -1
“தேசிய சிறுபான்மை இனங்களின் இணைவும் சாத்தியப்பாடுகளும்”
“குரளற்ற மக்கள் திரளின் கையறு நிலையும் பாடுகளும்”
“உயர்த்தப்பட்ட சாதி எதிர்பார்ப்புகளும், தலித் உளவியலும்…”
“இலங்கை பயணத்தில் கண்டவை”
வி.சிவலிங்கம்
எம்.பௌசர்
என்.சரவணன்
தேவதாசன்
அமர்வு -2
இரு நூல்களின் அறிமுகம்
கசகறணம்
ந.சுசீந்திரன்
உமா (பேர்லின்)
எஸ்.சிவராஜன்
தேவதாசன்
யோகரட்னம்
இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை தலித்தியம் (www.dalittiyam.com) இணையத்தளத்தில் காணலாம்