Newest Posts

“ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”

பிரான்சில் நடைபெற்ற தியாகிகள் தினம்.

(அசுரா)

மண்டபத்தில் நுழைந்ததும் நூற்றுக்கும் அதிகமான கொல்லப்பட்ட தோழர்களினது புகைப்படங்கள் மண்டபச் சுவர்களை நிறைத்துக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.   நடந்து முடிந்த யுத்தம் பலிகொண்ட உயிர்களின் பெறுமதி இப்படி சுவர்களில் தொங்குவதற்காகவே பயன்பட்டுப்போனது. அந்த யுத்தம் விழுங்கி ஏப்பம் விட்ட உடைமைகளின் இழப்புக்களையும் நாம் யாரிடம் கோருவது? அது மட்டுமா நிகழ்ந்தது!! மனிதத்தை, மக்களை நேசித்த தோழர் நாபாவையும் பலிகொடுத்து… இன்று நாம் சாதித்ததுதான் என்ன? இந்தக் கேள்வியானது எமது மனச்சாட்சியை தொடர்ந்து அச்சுறுத்திய வண்ணம் இருக்கத்தான் போகின்றது. ஆயிதப்போராட்டத்தை ஒரு சிலகாலமாவது ஆதரித்தவன் என்ற வகையில்  இழந்த உயிர்களுக்கும், அழிக்கப்பட்ட உடைமைகளுக்கும் நானும் ஒரு காரணமாய் இருந்துள்ளேன்  எனும் குற்ற உணர்வுடனேயே  மண்டபத்தின் ஓர் மூலையில் கூனிக் குறுகி அமர்ந்து கொண்டேன். தொடர்ச்சி

உரையாடல்

அகில இலங்கைச் சிறுபான்மைத்  தமிழர் மகாசபை உறுப்பினர்களான  திரு அன்ரனி மாஸ்டருடனும் ,  திரு தெணியான் அவர்களுடன்  அண்மையில் உரையாட முடிந்தது. இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பிற்பாடான சம்பவங்கள் குறித்தும், மகாசபையின் அடுத்த கட்ட நகர்வுகள்  பற்றிய உரையாடலுமாகவே அது அமைந்தது.  தொடர்ச்சி

இரண்டாவது பன்முகவெளி

2010 நவம்பர் 20-21 ஆம் திகதிகளில் கனடாவில் நடைபெற உள்ளது.

நிகழ்த்தப்பட்ட  வன்முறைகள்   மீதும் நிகழ்த்தப்படு வதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக்  கொண்டிருக்கும்  வன்முறைகள் மீதும்  நாம்  தொடர்ந்து எதிர்வினையாற்றிக்  கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக  அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் , கட்டுரைகளாகவும்,   கவிதைகளாகவும்,   நாடகங்கள் திரைப்படங் களாகவும் பதிவை முன்வைத்துதொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்தப் பன்முகவெளி.

நவம்பர் 2010  20-21ஆம் திகளில் கனடாவில் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.  இரண்டாவது ‘பன்முகவெளி’ நிகழ்வை சிறப்பிக்க மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வருகிறார்.. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் விரைவில்; அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு: panmukaveli@gmail.com

”கலாநிதி சி.சிவசேகரத்துடன் ஒரு உரையாடல்”

‘ஜீவமுரளி’

தேசம், மொழி, சாதி, பால், சிறூபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அரசியற் போராட்டங்களும், அவர்களின் அடையாள அரசியல் போராட்டங்களும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொள்கின்றன என்ற வாதங்களும், அவை தழுவிய உபதேசங்களும் இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டுக்கொண்டு வருகின்றன. இவை தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என முன்முடிவுகளை அன்று சொன்னவர்களும், இன்று சொல்பவர்களும் பாலஸ்தீனத்தையும், குர்திஸ்தானையும், முள்ளிவாய்க்காலையும் உதாரணங்களாக மீண்டும் வலியுறுத்துகின்றனர். தேசம், அடையாளங்கள் சார்ந்த போரட்டங்களின் தோல்வி என்பன ஏகாதிபத்தியங்களினதும், வல்லரசுகளினதும் சதி என ஒற்றை வரியில் விளங்கப்படுத்தப் படுவனவாயும், ஒற்றைவரியில் விளங்கப்படவேண்டிய சூத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சி

தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன…

நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் என்பது மிகத் துயரமாகவும் வேதனையாகவும் அமைந்துவிட்டது. இதில் வேதனை, துயரம்  என்பது நாம் ஆதரவளித்த  அனைத்திலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை யானது  தேர்தலில் தோல்வியுற்றது என்பதற்காகவல்ல. இலங்கையில் வாழும் கணிசமான தமிழர்கள் தொடர்ந்தும் இனவாதச் சிந்தனையுள் பேணிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே எமது வேதனைக்குரிய காரணமாக உள்ளது. தொடர்ச்சி

‘அம்பேத்கர் திரைப்படம்’

“சகோதரத்துவ உணர்வு என்பது இந்துக்களுக்கு அன்னியமானது என்பதில் ஏதேனும் ஆச்சரியமுண்டா? வாழக்கையின் இன்ப, துன்பங்களில்  பங்கெடுப்பது என்பது அறவே இல்லாதபோது சகோதரத்துவ உணர்வு எவ்வாறு வேர்கொள்ளும்?

ஏன் இந்துக்கள் தங்கள் வாழ்க்கையின் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதே எல்லாக்  கேள்விக ளுக்கும் தலையான கேள்வியாகும்.  அவர்களுடைய மதம் அப்படி பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குப் போதிக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. இந்த முடிவு வியப்பைத் தராது. இந்துயிசம் எதைச் சொல்லித் தந்தது? கலப்பு மணம் வேண்டாம்! கலந்துண்ணல் வேண்டாம்! கலந்து பழகுதல் வேண்டாம்! என்றெல்லாம் இந்து மதம் கூறுகிறது.  இந்த ‘வேண்டாம்தான்’ இந்து மதப் போதனைகளின் சாராம்சம் ஆகும்”  (அண்ணல் அம்பேத்கர்)

இந்து சமயத்தின் தோற்றம்  அதன்  கோட்பாடுகள் பற்றி யெல்லாம் மிக ஆழமாக விசாரணைக்குட்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அம்பேத்கரும் அவர் சிந்தனைகளும்  தலித் சமூகத்தின்  அரசியல்  மேம்பாட்டிற்கு மட்டுமேயான  ஒரு சிந்தனை  என நாம்  கருதிவிடமுடியாது.

தந்தை பெரியாரைப்போல் அண்ணல்  அமபேத்கர் சிந்தனைகளும் சமூக விடுதலைக்கான  தத்துவ  அடிப்படைகளைக் கொண்டது .

2000 ஆம் ஆண்டில் தாயாரிக்கப்பட்ட அம்பேத்கரின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம்.

(நன்றி மீனகம்) தொடர்ச்சி

’77′க்குள் புதைந்து கிடக்கும் கூட்டமைப்புக் கூத்தாடிகள்

__சித்தன்__

ஏப்ரல் 1ஆம் திகதி அன்று ரி.பி.சி வானொலியில் திரு. மாவை சேனாதிராசா அவர்களின்  உரையாடலின்  பிரதிபலிப்பாய்…..

மாவை சேனாதி அண்ணா.., இரண்டு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் நேயர்களின் எல்லாக் கேள்விக்கும்  படக்கு படக்கெண்டு ஒரே பதிலை  திரும்பத் திரும்ப  முழங்கிக்கொண்டே இருந்தீங்க. யார் என்ன கேள்வி கேட்டாலும்  இழுத்து  ஈச்சு  சொன்னதையே  சொல்லிச் சொல்லி ஒரு மாதிரி இரண்டு மணிநேரத்தை சமாளிச்சிட்டீங்க உங்கட  பொலிற்றிக் ரெக்னிக் மிக அபாரம் .

திரு. சிவலிங்கம் அவர்களும், திரு. ராம்ராஜ் அவர்களும் கேட்கும்  ஆழமான கேள்விகளை பின்னால தள்ளி…, தள்ளிப்போட்டு  நீங்க உச்சிக்கொண்டு திருஞ்சீங்க. அடிப்படைவாத கொம்யூனிஸ்டுக்களைப்போல  கோட்பாட்டு விளக்கங்களையே உளறிக்கொண்டு இருந்தீங்க. உங்கட  கோட்பாடுகளும், தத்துவங்களும் பாருங்கோ அங்க பசி பட்டினியாக் கிடக்கிற சனங்களுக்கு என்னத்த செய்யப்போது. தொடர்ச்சி

திரு. ஆனந்த சங்கரி அவர்களுக்கு …..

ஐயா,
வழமையாக நீங்கள்தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவீர்கள். அதை மீறி நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டி வந்ததையிட்டு வெட்கப்படுகிறோம். யாழ் உதயன் பத்திரிகையில் நீங்கள் கொடுத்திருந்த செவ்வியே இதனை எழுதத் தூண்டியது.

கடந்த முப்பது வருடங்களாக  இலங்கை நாடு பலத்த இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியிருந்தது. இன முறுகல் தோன்றிய ஆரம்பகாலங்களில் நீங்கள் இலங்கையின் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சாதாரணமக்களுக்குக் கிட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய வாசஸ்தலத்தில் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதும் நீங்கள் த.வி.கூ யின் பா.உ.ஆகவே இருந்தீர்கள். பின்னைய காலத்தில் நீங்களும் கிளிநொச்சியை விட்டோடியவர்தானே. நீங்கள் அரசபாதுகாப்பில் இருந்துகொண்டுதானே பிரபாகரனுக்கு கடிதம் எழுதிவந்த நீங்கள்.

ஆனால் இன்று சுயேட்சையாக தேர்தலில் நிற்கும் புத்திஜீவிகளும், இலக்கியவாதிகளும் இராணுவச்சுற்றி வளைப்பிற்குள்ளும்,  புலிப்பாசிசத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இருந்ததில்லை. ஐயா நீங்களும், உங்கள் மதிப்பிற்குரிய கனவான்களும் வளர்த்துவிட்ட அரசியலை ஆயுதத்துடன் முன்னெடுத்தவர்கள் தானே புலிகள். துரையப்பாவின் கொலையென்பது உங்கள் கனவான் அமிர்தலிங்கத்தின் மனம் குளிரச் செய்யபட்டதுதானே. துரோகிகள் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் உங்கள் மதிப்பிற்குரிய கனவான்அமிர்தலிங்கம் என்பதுதானே வரலாறு. தொடர்ச்சி

அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்

நேர்காணல்: அ.தேவதாசன்

தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றொரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது.

(ஷோபாசக்தி ) தொடர்ச்சி

வேண்டுகோளும் எமது செயற்திட்டங்களும்

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்.

அன்பார்ந்த மக்களே

தமிழ் மக்கள் மத்தியில் வாழும்  உரிமைகுறைந்த எமது மக் களின் சமூக சமத்துவத்துக்காகவும் ஏனைய நலன்களைப் பேணுவதற்காகவும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவந்த ஒரு தாபனம் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை. இந்தச் சபையின் மதிப்புக்குரிய பெருந்தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள். அன்னாரின் பாராளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, உரிமை குறைந்த எமது மக்களின் பிரச்சனகளை  அரசு மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கும் வெகுவாய்ப்பாக அமைந்திருந்தது. தொடர்ச்சி

This website uses a Hackadelic PlugIn, Hackadelic SEO Table Of Contents 1.7.3.