February 6th, 2010
தேவதாசன்
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் சில சிறிய அசம்பாவிதங்களுடன் நடந்து முடிந்திருப்பினும் தேர்தல் மோசடிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்ட தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்திருப்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் தேர்தல் முடிவுகள் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் மிகப்பெரிய வேற்றியை அடைந்துள்ளார்.
சிங்கள மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக யுத்த வெற்றிக் கதாநாயகர்கள் களம் இறங்கி போட்டியில் குதித்தனர் எனக் கூறப்பட்டாலும் சிங்கள மக்கள் உறுதியான தமக்கும் இலங்கைக்கும் தேவையான அவசியமான ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சி தங்களுள் ஒரு வரை வேட்பாளராக நிறுத்தமுடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது. அந்த நிலையில் மகிந்தராஜபக்சவிற்கும் சரத்பொன்சேகாவிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தது ஐக்கியதேசியக்கட்சி. எனவேதான் சரத்பொன்சேகாவிற்கு பதவி ஆசையை ஊட்டி அவரை தேர்தல் களத்திலும் இறக்கியது. காலம் காலமாக மேற்குலக நாடுகளின் கைப்பிள்ளையாக இருப்பதனால் சரத்பொன்சேகாவையும் அமெரிக்காவுக்கு அனுப்பி அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் வெற்றி பெறலாம் எனத் தீர்மானித்தனர் ஐக்கியதேசியக் கட்சியினர். Continue Reading »
February 3rd, 2010
அறிமுகம்
ஒரு குறித்த மக்கள் தொகுதியின் சமூகமாற்றம் என்பது பல்வேறு அம்சங்களால் சாத்தியமாகின்றது. குறித்த சமூகத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள், அங்கு உருவாகும் புரட்சிகர சிந்தனைகள், பண்பாட்டுக் கூறுகளிலான மாற்றங்கள், புறநிலைச் சக்திகளின் தலையீடகள் என்று மாற்றத்திற்கான காரணிகளை பட்டியல்படுத்திச் சொல்ல முடியும். இந்தவகையில் ஒரு சமூகத்தில் முன்னர் நிலவி வந்த அந்தச் சமூகம் எதிர்கொண்ட பிணக்குகளுக்கான தீர்வுகளாக எழுந்துள்ள ‘’நிறுவன அமைப்பாண்மைகள்‘’ கூட சமூக மாற்றத்தின் ஒரு நேரடி விளைவாகவும், மாறாக சமூக மாற்றத்தைத்தூண்டும் பிரதான விசைகளாகவும் தொழிற்படுவதைக் காணலாம். Continue Reading »
February 1st, 2010
(Saakaran)
Today is the presidential election in Srilanka.This election will decide for a military dictatorship or will continue the democratic government ,and it is all dependent upon the decision of the majority of the Srilankan people. The western forces and the imperialist are trying their best to force the people to vote in favour of the military dictatorship. Therefore the pro -imperialist medias , are openly supporting ex-Major General Sarath Fonseka. Some other way they wanted to defeat the present patriotic and democratic leadership of Hon.Mahinda Rajapaksa.Srilanka was one of the few countries in the South East Asia was never ruled by Military Dictatorship after it gained independence from the British Imperialism. Continue Reading »
January 30th, 2010
பன்முகவெளி அரங்கு கனடாவில் முதல் முறையாக 23 ஜனவரி 2010 அன்று23 ஜனவரி 20105225 Finch Av East, wood said point, Scarborough,Ont,Canada .இல் நடைபெற்றது.
நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்த பன்முகவெளி என அறிவித்தது அனைவருக்கும் தெரியும். Continue Reading »
January 26th, 2010
அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். ’சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர்’ நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்கு நான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள் உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்கு வற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள். பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல ஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்து யாழ்ப்பாண மண்ணிலே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திருகோணமலைக்கும் வன்னிப் பகுதிக்கும் இடம்பெயர்ந்த வரலாறு ஏராளம் ஏராளம்.
Continue Reading »
December 20th, 2009

பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் தலைவர் தேவதாசன் அவர்கள் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அச்செய்தியறிந்து ‘மற்றது’ சஞ்சிகையின் ஆசிரியர் கற்சுறா அவர்கள் தேவதாசனிடம் கேட்டறிந்த கொண்ட முக்கிய விடயங்கள் இவை;
Continue Reading »